Friday 3rd of May 2024 09:32:04 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.மேயர் கைது செய்யப்பட்டமைக்கு ரொரண்டோ மேயர் ஜோன் டோரி கண்டனம்!

யாழ்.மேயர் கைது செய்யப்பட்டமைக்கு ரொரண்டோ மேயர் ஜோன் டோரி கண்டனம்!


இலங்கை அரசின் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமையை கனடா - ரொரண்டோ நகர மேயர் ஜோன் டோரி கண்டித்துள்ளார்.

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரியுடன் இணைந்து யாழ்.மாநகர சபை மேயர் கைது செய்யப்பட்டமைக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவா் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழர்களுக்கு எதிராக தொடரும் இவ்வாறான அநியாயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இதற்கு அனைவரும் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும். தமிழ் சமூகத்துக்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் எனவும் ரொரண்டோ மேயர் ஜோன் டோரி தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கனடா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE